நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - மக்களவை மாலை 5 மணி வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மக்களவை மாலை 5 மணி வரை ஒத்திவைப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - மக்களவை மாலை 5 மணி வரை ஒத்திவைப்பு
Published on

டெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என 4வது நாளாக எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வருகின்றன.

இதன்படி, இன்று காலை இரு அவைகளிலும் நடவடிக்கைகள் தொடங்கின. இதில், மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இன்றைய நிகழ்வுகள் தொடங்கிய 3 நிமிடங்களில், மக்களவையை மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா.

இதனை தொடர்ந்து மதியம் 2 மணிக்கு மக்களவை கூடியது. எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை மாலை 5 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரத்தில் 4-வது நாளாக நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகளின் 'இந்தியா'கூட்டணி முடக்கி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com