

புதுடெல்லி,
மேற்கு வங்காள கவர்னர் ஜக்தீப் தன்கர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்கு சேர்ந்த அவருக்கு பரிசோதனையில் மலேரியா காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
கவர்னருக்கு சிறப்பு டாக்டர்கள் கொண்ட குழு மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது.