ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் - ஆய்வுக்கு பின் வெளிநாட்டு தூதர்கள் வேண்டுகோள்

ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என ஆய்வுக்குபின் வெளிநாட்டு தூதர்கள் தெரிவித்து உள்ளனர்.
படம்: PTI
படம்: PTI
Published on

ஸ்ரீநகர்

வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளைச் சேந்த 24 தூதாகள் புதன்கிழமை ஜம்மு-காஷ்மீருக்கு வருகை புரிந்தனர்.ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிப் பணிகளை வெளிநாடுகளின் தூதர்கள் குழு ஆய்வு செய்வது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளாச்சிப் பணிகள் குறித்து 24 வெளிநாட்டு தூதர்கள் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது.முதல் நாள் பயணத்தில் தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்கள், யூனியன் பிரதேசத்தை நிர்வகிக்கும் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் தூதர்கள் பேசினர். இரண்டாவது நாளான நேற்று ஜம்மு-காஷ்மீர் ஐகோர்ட் தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டலை நேரில் சந்தித்தனர்.

24 தூதர்கள் குழு ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம் இன்று ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலையை மீட்டெடுக்க சட்டமன்றத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவது உள்பட மேலும் அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்து உள்ளது.

நவம்பர்-டிசம்பர் மாதங்களில் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில்களுக்கு (டி.டி.சி) தேர்தல்களை நடத்துதல் மற்றும் இந்த மாத தொடக்கத்தில் 4 ஜி இணைய சேவைகளை மீண்டும் தொடங்குவது போன்ற மத்திய அரசின் சமீபத்திய நடவடிக்கைகளை கவனத்தில் கொண்டு, ஒரு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி கூறினார் சட்டமன்ற சட்டமன்றத் தேர்தல்களின் ஆரம்ப அமைப்பு உட்பட அரசியல் மற்றும் பொருளாதாரத் துறையில் எடுக்கப்பட வேண்டிய பிற முக்கியமான நடவடிக்கைகள் பலவற்றை நாங்கள் எதிர்பார்க்கிறோம்."ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் கருத்து சுதந்திரத்திற்கான உரிமை அனைத்து ஜனநாயக நாடுகளுக்கும் ஒரு முக்கிய மதிப்பு வாய்ந்தது என கூறினார்.

சில தூதர்கள் கூறும் போது , ஒரு விரிவான மதிப்பீட்டைச் செய்வதற்கு 3 நாட்கள் மிகவும் குறைவானது இருப்பினும் நிலைமையில் ஒப்பீட்டளவில் முன்னேற்றம் இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தன என கூறினர்.

தாங்கள் உரையாடிய அடிமட்ட அரசியல்வாதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் வணிகர்களில் பெரும்பாலோர் சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு, முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது போன்றவற்றை உறுதிப்படுத்த கூடுதல் நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளதாகவும் தூதர்கள் தெரிவித்தனர்.

ஐரோப்பிய ஒன்றிய தூதரைத் தவிர, பெல்ஜியம், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, அயர்லாந்து, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின் மற்றும் சுவீடன் ஆகிய தூதர்கள் இந்த குழுவின் ஒரு பகுதியாக இருந்தனர். மீதமுள்ள தூதர்கள் வங்காள தேசம் , பிரேசில், சிலி, கியூபா, கானா, கிர்கிஸ் குடியரசு மற்றும் மலேசியா போன்ற பல்வேறுநாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com