ஐகானிக் கால் மேம்பாலத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி...!

சபர்மதி ஆற்றங்கரை அருகே கட்டப்பட்டுள்ள எல்லிஸ் பாலம் மற்றும் சர்தார் பாலம் இடையே உள்ள ஐகானிக் கால் மேம்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார்.
ஐகானிக் கால் மேம்பாலத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி...!
Published on

புதுடெல்லி,

கடந்த வாரம் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், அகமதாபாத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சபர்மதி ஆற்றங்கரையும் ஒரு தசாப்தத்தை நிறைவு செய்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்களின் ஆர்வத்தை மனதில் கொண்டு, எல்லிஸ் பாலம் மற்றும் சர்தார் பாலம் இடையே கால் மேல் பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்த 300 மீட்டர் பாலம் சபர்மதி ஆற்றின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியை இணைக்கிறது. இந்த பாலம் மேற்குக் கரையில் உள்ள மலர் பூங்கா மற்றும் நிகழ்வு மைதானம் இடையே உள்ள பிளாசாவிலிருந்து கிழக்குக் கரையில் உள்ள உத்தேச கலை / கலாச்சார / கண்காட்சி மையத்தை இணைக்கிறது. ஐகானிக் கால் மேம்பாலம் திறப்பால் சுற்றுலாபயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com