அதிமுக பொதுக்குழு வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல்

எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்
அதிமுக பொதுக்குழு வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல்
Published on

புதுடெல்லி,

அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தை எதித்து முன்னாள் முதல்-அமைச் சர் ஓ.பன்னீசெல்வம், பொதுக்குழு உறுப்பினா வைரமுத்து ஆகியோ சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக் குழு கூட்டம் செல்லாது என்று தீப்பளித்தா. தனி நீதிபதியின் தீப்பை எதித்து எடப்பாடி பழனி சாமி சாபில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பை ரத்து செய்து டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார், அதேபோல ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும் பொதுக்குழு உறுப்பினருமான அம்மன்.பி.வைரமுத்து சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 'எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் போது பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த அவசரப்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். அதைத் தொடர்ந்து நீதிபதிகள், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் ஓ.பன்னீர் செல்வத்தின் மேல்முறையீட்டு வழக்கில் பதில் அளிக்கும் படியும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.

இதையடுத்து கோர்ட்டு உத்தரவை ஏற்று பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தமாட்டோம் என்று இ.பி.எஸ். தரப்பு உத்தரவாதம் அளித்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை வருகிற நவம்பர் மாதம் 21-ந் தேதி நடைபெறும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.அதில்

தொண்டர்கள் விருப்பம் ,கட்சியின் நலனை கருத்தில் கொண்டு ஒற்றை தலைமை ஏற்படுத்தப்பட்டது.அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே பொதுக்குழு கூட்டப்பட்டது.

பொதுக்குழு கூட்டுவதற்க்கு முன்னதாக செல்வத்திற்கு நோட்டிஸ் வழங்கப்ட்டது அதிமுக அலுவலகத்தை சூறையாடி கட்சி விதிகளை ஓ.பன்னீர் செல்வம் மீறியுள்ளார் கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் எந்த நிவாரணமும் பெற தகுதியற்றவர் ஓ.பன்னீர் செல்வம் . என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com