விமானப்படை ஹெலிகாப்டர் தீப்பிடித்து விழுந்தது 6 பேர் பலத்த காயம்

கேதார்நாத்தில் விமானப்படை ஹெலிகாப்டர் தீப்பிடித்து விழுந்ததில் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
விமானப்படை ஹெலிகாப்டர் தீப்பிடித்து விழுந்தது 6 பேர் பலத்த காயம்
Published on

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாகை மாவட்டத்தின் குப்தகாசி என்னும் இடத்தில் இருந்து நேற்று காலை கேதார்நாத் நகருக்கு கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அதில் 6 வீரர்கள் இருந்தனர்.

அந்த ஹெலிகாப்டர் காலை 8.20 மணி அளவில் கேதார்நாத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் தரையிறங்க முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த ஹெலிகாப்டர் அங்கிருந்த இரும்பு கம்பிகளின் மீது மோதியதில் தீப்பிடித்துக் கொண்டது. பின்னர் தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 6 வீரர்களும் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த விபத்து பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com