பிரதமர் மோடியின் விமானத்தை விமானப்படை அதிகாரிகள் இயக்குவார்கள்

பிரதமர் மோடியின் விமானத்தை விமானப்படை அதிகாரிகள் இயக்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் விமானத்தை விமானப்படை அதிகாரிகள் இயக்குவார்கள்
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகிய உயர்மட்ட தலைவர்கள் பயணம் செய்யும் ஏர் இந்தியாவின் பி747 ரக விமானங்களை ஏர் இந்தியா விமானிகளே இயக்கி வருகின்றனர். ஆனால் இந்த தலைவர்கள் பயணம் செய்வதற்காக 2 பி777 ரக விமானங்கள் அமெரிக்காவில் இருந்து வாங்கப்படுகின்றன.

அடுத்த ஜூலை மாதம் இந்தியா வர இருக்கும் இந்த விமானங்களை விமானப்படை அதிகாரிகள் இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் இந்த விமானங்களை ஏர் இந்தியாதான் பராமரிக்கும் என கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com