ஏர் இந்தியாவின் புதிய சர்வதேச பயணச் சேவை அறிமுகம்

ஏர் இந்தியாவின் புதிய சர்வதேச பயணச் சேவை அறிமுகம் செய்ய உள்ளது.
ஏர் இந்தியாவின் புதிய சர்வதேச பயணச் சேவை அறிமுகம்
Published on

ஏர் இந்தியா நிறுவனம் அமிர்தசரசில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தனது சர்வதேச பயணிகளுக்காக புதிய பயணச் சேவையை அறிமுகப்படுத்துகிறது. இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் ஆதரவுடன் தொடங்கப்படும் இந்தச் சேவை, இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களைச் சேர்ந்த பயணிகள் எளிதாக சர்வதேசப் பயணம் மேற்கொள்ள வழிவகை செய்கிறது.

இதன் மூலம், பயணிகள் டெல்லிக்குச் செல்லும் முன்பே அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்திலேயே தங்களின் சுங்கம் மற்றும் குடிவரவு சோதனைகளை முழுமையாக முடித்துக் கொள்ளலாம். கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்லும் பஞ்சாப் மாநிலப் பயணிகளை கவரும் வகையில் இந்த தடையற்ற இணைப்புச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com