மராட்டிய மந்திரிசபை விரிவாக்கம்; துணை முதல் மந்திரியாக மீண்டும் பதவியேற்றார் அஜித் பவார்

மராட்டிய மந்திரிசபை விரிவாக்கத்தில் அஜித் பவார் துணை முதல் மந்திரியாக இன்று மீண்டும் பதவி ஏற்று கொண்டார்.
மராட்டிய மந்திரிசபை விரிவாக்கம்; துணை முதல் மந்திரியாக மீண்டும் பதவியேற்றார் அஜித் பவார்
Published on

மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாடி என்ற தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை உருவாக்கி கடந்த மாதம் 28-ந்தேதி ஆட்சி அமைத்தது. அப்போது முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவியேற்றுக்கொண்டதுடன், 3 கட்சிகளின் சார்பில் தலா 2 பேர் என 6 பேர் மந்திரிகளாக பதவியேற்று கொண்டனர்.

மந்திரி சபை விரிவாக்கத்தில் தொடர்ந்து கால தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 24ந்தேதி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை திடீரென சந்தித்து பேசினார்.

அவர்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர். இதன்பின் வருகிற 30ந்தேதி மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும் என தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அப்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்பார் என்றும் தகவல்கள் வெளியாகின.

அஜித் பவார் ஏற்கனவே 2014-ம் ஆண்டு அமைந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசில் துணை முதல்-மந்திரியாக பதவி வகித்தவர்.

இந்நிலையில், மராட்டிய மந்திரிசபை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் அஜித் பவார் துணை முதல் மந்திரியாக மீண்டும் பதவி ஏற்று கொண்டார். அவரை தொடர்ந்து 36 பேர் மந்திரிகளாக பதவியேற்று கொள்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com