

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிதாக நியமிக்கப்பட்ட 6 நாடுகளின் தூதர்கள் மற்றும் உயர் ஆணையர்கள் தங்களது நற்சான்றிதழ்களை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் வழங்கினர்.
தெற்கு சூடான், மால்டோவா, ஸ்வீடன், ஜெர்மனி, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் மற்றும் உயர் ஆணையர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.அவர்கள் தங்களது நற்சான்றிதழ்களை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் முறைப்படி வழங்கினர்.
பின்னர், இந்தியாவுடனான தங்கள் நாடுகளின் நட்புறவு, இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் எதிர்கால உறவுகள் தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர். இந்த நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.