தமது அரசைக் கவிழ்க்க பா.ஜனதா முயற்சி பிரதமர் மோடிக்கு ராஜஸ்தான் முதல்வர் கடிதம்

பிரதமர் மோடிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், தமது அரசைக் கவிழ்க்க சதி நடப்பதாக கடிதம் எழுதியுள்ளார்.
தமது அரசைக் கவிழ்க்க பா.ஜனதா முயற்சி பிரதமர் மோடிக்கு ராஜஸ்தான் முதல்வர் கடிதம்
Published on

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் மத்தியப் பிரதேசத்தை முன்மாதிரியாகக் கொண்டு சச்சின் பைலட் மூலம் தமது அரசைக் கவிழ்க்க பா.ஜனதா முயற்சி எடுத்து வருவதாகவும்,

ஜனநாயக ரீதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை ஒவ்வொன்றாக கவிழ்ப்பதற்கான நடவடிக்கைகளை கர்நாடகம் மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் அரங்கேற்றுவது அரசியல் சாசனத்தையே அவமதிக்கும் செயலாகும் என்றும் அசோக் கெலாட் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com