அமித்ஷாவின் காஷ்மீர் வருகை உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வாகாது - மெகபூபா விமர்சனம்

காஷ்மீரில் அமித்ஷா மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்தை மெகபூபா முப்தி விமர்சனம் செய்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீர் சென்றுள்ள மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஸ்ரீநகரில் இருந்து சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்கி வைத்ததுடன், மருத்துவ கல்லூரிக்கும் அடிக்கல் நாட்டினார். அவரது இந்த பயணத்தை மாநில முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி விமர்சித்து உள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், உள்துறை மந்திரி, ஸ்ரீநகரில் இருந்து சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்குவதும், மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டுவதும் புதிதல்ல. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் பல மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளித்து, அவை இன்று செயல்பாட்டிலும் உள்ளன. எனவே இந்த ஒப்பனை நடவடிக்கைகள் இங்குள்ள உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வாகாது. ஒரு கட்டமைக்கப்பட்ட நடவடிக்கையான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் மூலம், மாநிலத்தை மத்திய அரசு ஒரு பெருங்குழப்பத்தில் தள்ளியிருக்கிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் உள்துறை மந்திரியின் வருகையை முன்னிட்டு காஷ்மீரில் 700-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதையும் மெகபூபா கண்டித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com