இந்தியாவில் மேலும் 1,272 பேருக்கு கொரோனா பாதிப்பு - தொற்றால் 3 பேர் பலி

இந்தியாவில் நேற்று மேலும் 1,272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

நாட்டில் நேற்று முன்தினம் 1,223 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று மேலும் 1,272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரத்து 674 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று முன்தினம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 628 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் தினசரி பாதிப்பு 1.02 சதவீதமாக பதிவாகி உள்ளது. தொற்றில் இருந்து நேற்று 2,252 பேர் குணம் அடைந்தனர். இதன் மூலம் தொற்றில் இருந்து குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 33 ஆயிரத்து 389 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 983 குறைந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 515 ஆக குறைந்துள்ளது.

தொற்றினால் கடந்த பல நாட்களாக இரண்டு இலக்கத்தில் இறப்பு பதிவாகி வந்தது. நேற்று முன்தினம் 14 பேர் இறந்தனர். நேற்று பஞ்சாப்பில் 2 பேர், மேற்கு வங்காளத்தில் ஒருவர் என நாட்டில் 3 பேர் மட்டுமே தொற்றால் பலியாகினர். தொற்றால் இறந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 770 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com