ஆந்திராவில் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 1,392 பேருக்கு தொற்று உறுதி

ஆந்திர மாநிலத்தில் இன்று மேலும் 1,392 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 1,392 பேருக்கு தொற்று உறுதி
Published on

அமராவதி,

ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,392 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,44,359 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திராவில் இன்று மேலும் 11 பேர் உயிரிழந்தநிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,802 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 21,235 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 8,16,322 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com