அனில் அம்பானி மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

வங்கிக்கணக்குகளை 'மோசடி' என்று அறிவிக்கும் விவகாரம் தொடர்பாக அனில் அம்பானி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
அனில் அம்பானி மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
Published on

புதுடெல்லி,

பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானி மற்றும் அவரது ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளை 'மோசடி கணக்குகள்' என்று ஏன் அறிவிக்கக்கூடாது என்று கேட்டு 3 பொதுத்துறை வங்கிகள் நோட்டீஸ் அனுப்பின.

அதை எதிர்த்து அனில் அம்பானி, மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த ஒற்றை நீதிபதி, வங்கிகள் நடவடிக்கை எடுக்க தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவை 2 நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அனில் அம்பானி 3 மனுக்களை தாக்கல் செய்தார்.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்து 3 மனுக்களையும் தள்ளுபடி செய்தது. அதே சமயத்தில், அனில் அம்பானி மும்பை ஐகோர்ட்டின் ஒற்றை நீதிபதி முன்பு தனது கோரிக்கையை விடுக்க அனுமதி அளித்தது. அந்த கோரிக்கையை விரைந்து விசாரித்து முடிக்கு மாறு ஒற்றை நீதிபதியை சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக்கொண்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com