அடுத்த மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் விழாக்கள் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (நவம்பர்) நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் விழாக்கள் அறிவிப்பு
Published on

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (நவம்பர்) நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

1-ந்தேதி மாதத் திரய ஏகாதசி, 4-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம், 6-ந்தேதி வணவ ஆச்சாரியார் திருமலைநம்பி சாத்துமுறை, 8-ந்தேதி நாக சதுர்த்தியையொட்டி பெரிய சேஷ வாகன வீதி உலா, வைணவ ஆச்சாரியார் மணவாள மகாமுனிகள் சாத்துமுறை,

10-ந்தேதி புஷ்ப யாகத்தை முன்னிட்டு அங்குரார்ப்பணம், 11-ந்தேதி புஷ்ப யாகம், வணவ ஆச்சாரியார் வேதாந்த மகாதேசிகன் சாத்துமுறை, 16-ந்தேதி கைசிக துவாதசி ஆஸ்தானம், சதுர்மாச விரதம் நிறைவு, 18-ந்தேதி காத்திகை தீப உற்சவம், 19-ந்தேதி திருமங்கை ஆழ்வார் சாத்துமுறை மேற்கண்ட விழாக்கள் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com