இந்தியாவில் இன்று மேலும் 77,266 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் இன்று மேலும் 77,266 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்று மேலும் 77,266 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
Published on

புதுடெல்லி,

உலகம் முழுவதும் கடந்த 8 மாதங்களாக கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் தினமும் ஆயிரக்கணக்கான புதிய நோயாளிகளையும், மரணங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தினமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் இன்று மேலும் 77,266 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கொரோனா பாதிப்புகளுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 77,266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 87 ஆயிரத்து 501 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் 7 லட்சத்து 42 ஆயிரத்து 023 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 60,177 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 25 லட்சத்து 83 ஆயிரத்து 948 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். நேற்று ஒரே நாளில் 1,057 பேர் பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61,529 ஆக உயர்வடைந்து உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் நேற்று 9,01,338 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதனுடன் 3 கோடியே 94 லட்சத்து 77 ஆயிரத்து 848 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com