கேரள தங்க கடத்தல் வழக்கில் அன்வர், அப்துல் மற்றும் ஜிப்சாலுக்கு ஜாமீன் - கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

கேரள தங்க கடத்தல் வழக்கில் அன்வர், அப்துல் மற்றும் ஜிப்சாலுக்கு ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள தங்க கடத்தல் வழக்கில் அன்வர், அப்துல் மற்றும் ஜிப்சாலுக்கு ஜாமீன் - கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

திருவனந்தபுரம்,

ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்து கேரளாவின் மணப்பாடில் உள்ள அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டியில் 30 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த கடத்தலுக்கு பின்னணியாக தூதரகத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் செயல்பட்டுள்ளார் என்பது விசாரணையில் வெளிவந்தது. பின்னர் அவர் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் பெங்களூருவில் வைத்து கைது செய்யப்பட்டார். இதுவரை ரூ.100 கோடி தங்கம் கடத்தப்பட்டு இருக்க கூடும் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஸ்வப்னா சுரேஷ், திரிச்சூர் மாவட்டத்தின் விய்யூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இதனிடையே இவ்வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் கடந்த மாதம் முகமது அன்வர், ஹம்சத் அப்துல் சலாம், சம்ஜு மற்றும் அம்ஜத் அலி ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் 4 பேருக்கும் சொந்தமான மலப்புரம் மற்றும் கோழிக்கோடு நகரங்களில் உள்ள 6 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைபற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் கேரள தங்க கடத்தல் வழக்கில் அன்வர், அப்துல் மற்றும் ஜிப்சாலுக்கு ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com