ஒண்டிவீரன் நினைவு தபால்தலைக்கு அனுமதி - தொலைத்தொடர்புத்துறை மந்திரிக்கு எல்.முருகன் நேரில் நன்றி

மத்திய இணை மந்திரி எல்.முருகன் நேற்று மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டார்.
ஒண்டிவீரன் நினைவு தபால்தலைக்கு அனுமதி - தொலைத்தொடர்புத்துறை மந்திரிக்கு எல்.முருகன் நேரில் நன்றி
Published on

புதுடெல்லி,

தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது நினைவு தபால் தலையை மத்திய அரசு வெளியிட உள்ளது. இதற்கு மத்திய மீன்வளம், கால்நடை, பால்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் நேற்று மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டார்.

இதனை தனது டுவிட்டர் பக்கத்திலும் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அதில், ஒண்டிவீரன் நினைவு தபால் தலை வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) நெல்லையில் வெளியிடப்பட இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com