ஆந்திராவில் மேலும் 7,956 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஆந்திர மாநிலத்தில் இன்று மேலும் 7,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் மேலும் 7,956 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

அமராவதி,

ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 7,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,75,079 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 60 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் ஆந்திர மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,972 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 93,204 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 9,764 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளநிலையில், இதுவரை 4,76,903 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com