அமர்நாத் மேக வெடிப்பு: நவீன உபகரணங்கள் உதவியுடன் மீட்புப்பணியில் முழுவீச்சில் களமிறங்கியுள்ள ராணுவ வீரர்கள்!

அமர்நாத் யாத்ரீகர்களை பத்திரமாக மீட்கும் பணியில், நவீன உபகரணங்களை ராணுவம் களமிறக்கியுள்ளது.
அமர்நாத் மேக வெடிப்பு: நவீன உபகரணங்கள் உதவியுடன் மீட்புப்பணியில் முழுவீச்சில் களமிறங்கியுள்ள ராணுவ வீரர்கள்!
Published on

ஸ்ரீநகர்,

அமர்நாத் யாத்ரீகர்களை பத்திரமாக மீட்கும் பணியில், நவீன உபகரணங்களை ராணுவம் களமிறக்கியுள்ளது. அவற்றை கொண்டு மீட்பு பணிகள் துரிதம் அடைந்துள்ளன.

அமர்நாத்தில் நேற்று மாலை ஏற்பட்ட மேக வெடிப்பு கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பக்தர்கள் காயம் அடைந்தனர். குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், உயிர்ச் சேதம் குறித்த தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் சிறப்பு மீட்பு உபகரணங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 

அமர்நாத்தில் மீட்பு நடவடிக்கைகள் குறித்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:-

நேற்று இரவு முழுவதும், ராணுவ அதிகாரிகள் மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு ஒருங்கிணைத்தனர். அமர்நாத் குகை மற்றும் நீலக்ரரில் மருத்துவ வளங்கள் செயல்படுத்தப்பட்டு கூடுதல் ஆதாரங்கள் பயன்படுத்தப்பட்டன.

கையடக்க வெப்ப இமேஜர்கள், இரவு தெளிவான பார்வைக்கான சாதனங்கள் மற்றும் பிற உபகரணங்கள் கொண்ட ஒன்பது கண்காணிப்புப் பிரிவினர் தேடுதல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டனர். இரண்டு த்ரோ வால் ரேடார்கள் மற்றும் இரண்டு தேடல் மற்றும் மீட்பு நாய் படைகளும் மீட்பு நடவடிக்கைக்காக குகைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இரண்டு மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் மூலம், அமர்நாத் குகையில் பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றுவதற்காக நகர்த்தப்பட்டன. இருப்பினும், மோசமான வானிலை காரணமாக, குகைக்குள் இரவு தரையிறக்கம் தோல்வியடைந்தது. மீட்பு மற்றும் மருத்துவ முயற்சிகள் விடியற்காலையில் தொடர்ந்தன. 

காலை 6.45 மணியளவில், காயமடைந்தவர்களை வெளியேற்றத் தொடங்குவதற்கு முதல் ஹெலிகாப்டர் தளத்தில் தரையிறங்கியது. மொத்தம் 15 உடல்கள் மற்றும் 63 காயம்பட்ட யாத்திரிகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளனர். இராணுவம் மற்றும் சிவில் ஹெலிகாப்டர்கள் இரண்டும் காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களை வெளியேற்ற இடைவிடாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

மொத்தம் 28 நோயாளிகள் குகையிலிருந்து நிலக்ரருக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். பின்னர், 11 பேர் சிவில் ஹெலிகாப்டர்களில் ஸ்ரீநகருக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர். 

வழித்தடம் சேறும் சகதியுமாக இருப்பதால், சிக்கித் தவிக்கும் யாத்திரிகர்களை இந்திய ராணுவ வீரர்கள் பால்டால் வரை அழைத்துச் சென்றனர்.பலியானவர்களின் உடல்கள் குகையிலிருந்து நிலக்ரருக்கு மாற்றப்பட்டுள்ளன.

அமர்நாத் சென்றுள்ள பக்தர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் மற்றும் ராணுவம் உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com