காஷ்மீரில் ராணுவ அதிகாரி தற்கொலை

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவ அதிகாரி ஒருவர், துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில், ராணுவ முகாம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ அதிகாரி ஒருவர், மாலை 4.50 மணி அளவில் திடீரென பணிக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com