

புதுடெல்லி,
இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியனின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. அரவிந்த் சுப்ரமணியத்தின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 16 ஆம் தேதியோடு முடிவடைய இருந்த நிலையில், இன்னும் ஓராண்டு அப்பதவியில் இருப்பார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பேற்றதும், காலியாக இருந்த தலைமை பொருளாதார ஆலோசகர் பொறுப்பில், அரவிந்த் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டார். கடந்த 2014 அக்டோபர் மாதம் அரவிந்த் சுப்ரமணியன் இந்த பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டார்.
டெல்லியில் உள்ள ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த அரவிந்த் சுப்ரமணியன் ஐஐடி அகமதாபாத்தில் தனது மேற்படிப்பை நிறைவு செய்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் அரவிந்த் சுப்ரமணியன் பயின்றுள்ளார். முன்னதாக, தலைமை பொருளாதார ஆலோசகர் பதவியில் இருந்து அரவிந்த் சுப்பிரமணியனை நீக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த ஆண்டு வலியுறுத்தி இருந்தார். பல்வேறு விமர்சனங்களையும் முன் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.