அசாமில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 3 பேர் கைது

அசாமில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கவுகாத்தி,

அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில் இந்திய அல்கொய்தா, அன்சருல் பங்களா டீம் ஆகிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அசாம் மியா பரிஷத் என்ற அமைப்பின் தலைவர் மொகர் அலி, பொதுச்செயலாளர் அப்துல் படேன் ஷேக், தனு தாடுமியா ஆகியோர் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

கோல்பாரா மாவட்டத்தில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட ஒரு வீட்டில், 'மியா மியூசியம்' என்ற பெயரில் சர்ச்சைக்குரிய கண்காட்சியை அவர்கள் அமைத்திருந்தனர். அந்த கண்காட்சிக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ் கைது செய்யப்பட்ட அவர்கள் நல்பாரிக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com