2022ம் ஆண்டு சட்டசபை தேர்தல்; 300 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்: யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசத்தில் வரும் 2022ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 300 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என முதல் மந்திரி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
2022ம் ஆண்டு சட்டசபை தேர்தல்; 300 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்: யோகி ஆதித்யநாத்
Published on

லக்னோ,

உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கூறும்போது, மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தலில் 75 இடங்களில் 67 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றி உள்ளது.

இதற்காக பா.ஜ.க. தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். வருகிற 2022ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க. வெற்றி பெறும்.

நாங்கள் 300க்கும் கூடுதலான தொகுதிகளை கைப்பற்றுவோம் என யோகி ஆதித்யநாத் உறுதிப்பட கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com