

மங்களூர்,
கர்நாடக மாநிலம், மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்ற நிலையில் மர்ம பை ஒன்று இருந்தது. இதுகுறித்து, பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், மங்களூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள், பையை சேதனை செய்ததில் வெடிகுண்டு இருந்தது தெரிய வந்தது. பையை மீட்டு, வெடிகுண்டு மீட்பு வாகனத்தில் வைத்து, வாகனத்தை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி உள்ளனர்.
அந்த பகுதியில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், மர்ம பை தெடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் உள்ள மற்ற விமான நிலையங்களும், பாதுகாப்பு வளையத்திற்கு கெண்டு வரப்பட்டுள்ளன.