மும்பை பெருநகர் பகுதி ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் ரூ.50 ஆக உயர்வு

மும்பை பெருநகர் பகுதி ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மும்பை பெருநகர் பகுதி ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் ரூ.50 ஆக உயர்வு
Published on

நாடு முழுவதும் ரெயில்வே பிளாட்பாரம் டிக்கெட் ரூ.10 ஆக இருந்தது. இந்தநிலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவத்தொடங்கிய நேரத்தில் ரெயில் நிலையங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க சில இடங்களில் பிளாட்பாரம் கட்டணம் ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டது. ஆனால் மும்பையில் பிளாட்பாரம் கட்டணம் ரூ.10 ஆக தான் இருந்து வந்தது.

இந்தநிலையில் கோடைகாலத்தில் ரெயில் நிலையங்களில் அதிக கூட்டம் கூடுவதை தடுக்க மத்திய ரெயில்வே பிளாட்பார கட்டணத்தை ரூ.50 ஆக அதிகரித்து உள்ளது. இந்த கட்டண உயர்வு முக்கிய ரெயில் நிலையங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மும்பை பெருநகர பகுதியில் உள்ள சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம், தாதர், எல்.டி.டி. ஆகிய ரெயில் நிலையங்களிலும் மும்பை பெருநகரில் உள்ள தானே, கல்யாண், பன்வெல், பிவண்டி ரோடு ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் கட்டணம் ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதார் கூறுகையில், "இது தற்காலிக கட்டண உயர்வு தான். 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்து உள்ள பிளாட்பாரம் டிக்கெட் கட்டண உயர்வு வரும் ஜூன் 15-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com