வங்கிகளில் மோசடி செய்தவர்களை விடமாட்டோம்: மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி

வங்கிகளில் மோசடி செய்தவர்களை விடமாட்டோம் என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். #ArunJaitley #PNBfraud
வங்கிகளில் மோசடி செய்தவர்களை விடமாட்டோம்: மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி
Published on

புதுடெல்லி,

பஞ்சாப் நேஷனல்வங்கியில் ரூ.11,400 கோடி சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்து வைர வியாபாரி நிரவ் மோடி மோசடி செய்ததாக அந்த வங்கி சிபிஐயிடம் புகார் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ அமைப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு விவகாரத்தை முன்வைத்து மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த சூழலில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற கண்டறிவதல் தணிக்கை அதிகாரிகள் தோல்வி அடைந்துவிட்டனர் என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அருண் ஜெட்லி கூறியதாவது:- வங்கியில் நடைபெற்ற மோசடியை உரிய நேரத்தில் கண்டறிய வங்கி நிர்வாகம் தவறி விட்டது. விதிமுறைகள் மீறலை கண்டறிய தணிக்கையாளர்களும் தவறிவிட்டனர். இனி இது பேன்ற மேசடிகளை முன்கூட்டியே கண்டறிய உரிய நடைமுறைகளை கண்காணிப்பு அமைப்புகள் உருவாக்க வேண்டும். மோசடி செய்தவர்களை விட்டுவிடமாட்டோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com