கிறிஸ்டியன் மைக்கேலை பிப்.27 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு

கிறிஸ்டியன் மைக்கேலை பிப்.27 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் அடைக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிறிஸ்டியன் மைக்கேலை பிப்.27 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு
Published on

புதுடெல்லி,

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் முறைகேடு வழக்கில், இடைத்தரகராக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கிறிஸ்டியன் மைக்கேலை பிப்ரவரி 27 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிறிஸ்டியன் மைக்கேல் கைது செய்யப்பட்டதன் பிண்ணனி:-

ஐக்கிய முற்பேக்கு கூட்டணி அரசு 2-வது முறையாக ஆட்சியில் இருந்தபேது குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பயணிப்பதற்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ரூ.3,600 கேடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக அந்த நிறுவனம் ரூ.450 கோடி லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக இத்தாலி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அந்த நிறுவனத்தின் 2 உயர் அதிகாரிகள் குற்றவாளிகள் என நிரூபணமானது.

இதையடுத்து, இந்தியாவிலும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த விமானப்படை முன்னாள் தலைமை தளபதி எஸ்.பி. தியாகி, அவரது உறவினர் சஞ்சீவ் மற்றும் ஒரு வழக்கறிஞர் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டர் ஹுலெட்டுக்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டார். துபாய் நீதிமன்றம் மைக்கேலை நாடு கடத்தி இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவிட்டது.

இதன்படி, கிறிஸ்டியன் மைக்கேல் என்பவர் டிசம்பர் 4-ஆம் தேதி துபாயிலிருந்து, இந்தியாவுக்கு நாடு கடத்தி கெண்டுவரப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com