அயோத்தி ராமர் கோவில் 2-வது ஆண்டு பிரதிஷ்டை தின விழா - பிரதமர் மோடி வாழ்த்து

ராமரின் ஆசீர்வாதத்தால் ராம பக்தர்களின் 500 ஆண்டுகால தீர்மானம் நிறைவேறியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் 2-வது ஆண்டு பிரதிஷ்டை தின விழா - பிரதமர் மோடி வாழ்த்து
Published on

புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் 2-வது ஆண்டு பிராண பிரதிஷ்டை தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

அயோத்தியில் ராமர் கோவில் 2-வது ஆண்டு பிராண பிரதிஷ்டை தின விழா நமது நம்பிக்கை மற்றும் மரபுகளின் தெய்வீக விழாவாகும். இந்த புனிதமான மற்றும் தூய்மையான தினத்தில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைத்து ராம பக்தர்களின் தரப்பிலிருந்தும், பகவான் ஸ்ரீ ராமரின் பாதங்களில் எனது கோடிக்கணக்கான வணக்கங்களை செலுத்துகிறேன். நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பகவான் ஸ்ரீ ராமரின் எல்லையற்ற கருணை மற்றும் ஆசீர்வாதங்களால், எண்ணற்ற ராம பக்தர்களின் 500 ஆண்டுகால தீர்மானம் நிறைவேறியது. இன்று, குழந்தை ராமர் மீண்டும் தனது அற்புதமான இல்லத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளார். குழந்தை ராமரின் பிரதிஷ்டைக்கு அயோத்தியின் தர்மக் கொடி சாட்சியாக உள்ளது.

ஒழுக்கத்தின் உருவகமாக இருக்கும் ராமர், ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும் சேவை, அர்ப்பணிப்பு மற்றும் இரக்க உணர்வை ஆழப்படுத்த உதவுவார். இது ஒரு வளமான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்குவதற்கான வலுவான அடித்தளமாக மாறும்

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com