

புடான்,
உத்தரபிரதேச மாநிலம் ஜலந்தரி சரை பகுதியில் வசித்தவர் சையது யூசுப் கான் (வயது 40). தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
அவருக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அவர் தனது அறையில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் நேற்று பிணமாக கிடந்தார்.
தற்கொலைக்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.