சிம்லா, ஆக.25- .மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கரத் இமாசலபிரதேச மாநில தலைநகர் சிம்லாவுக்கு சென்றார். .அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ''நாட்டில் எந்த பொதுத்துறை வங்கியும் தனியார்மயம் ஆக்கப்படாது. அதுபோன்ற செயல்திட்டம் எதுவும் இல்லை'' என்று கூறினார்.