பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமனை பாரதியார் பாடலை பாடி ப.சிதம்பரம் புகழ்ந்தார்

பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமனை பாரதியார் பாடலை பாடி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் புகழ்ந்தார்.
பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமனை பாரதியார் பாடலை பாடி ப.சிதம்பரம் புகழ்ந்தார்
Published on

புதுடெல்லி,

மாநிலங்களவையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசும்போது கூறியதாவது:-

நான் மகிழ்ச்சியான சூழ்நிலையில் பேச விரும்புகிறேன். நேற்று கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால் நான் மகிழ்ச்சியடையவில்லை, ஜனநாயகம் ஒவ்வொரு நாளும் ஒரு அடியை சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடையவில்லை.

கர்நாடகாவில், கோவாவில் நாம் கண்டது அரசியல் முன்னேற்றம் என்று தோன்றலாம், ஆனால் அது பொருளாதாரத்தில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள், மதிப்பீட்டு முகவர், உள் நிறுவனங்கள் இந்திய ஊடகங்களைப் பின்பற்றுவதில்லை.

அரசியல் ஸ்திரமின்மை குறித்து அவர்கள் கேட்பது மற்றும் படிப்பது பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நிதி ஒதுக்கீடு தொடர்பான விவரங்கள் பட்ஜெட் உரையில் இடம்பெறாதது ஏன்?. 2020-ல் நாட்டின் வளர்ச்சி விகிதம் எவ்வளவு என்பதை அரசால் கணிக்க முடியவில்லை.

மாநிலங்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமனை, பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாரதியாரின் பாடலை சுட்டிக்காட்டி ப.சிதம்பரம் பாராட்டினார். தற்போதைய நிதி அமைச்சர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது கூடுதல் மகிழ்ச்சி என கூறினார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com