பீகார் சட்டசபையில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மீது சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது!
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பாட்னா,

பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகளுடன் இணைந்து புதிய ஆட்சி அமைத்துள்ளது. பீகார் முதல்-மந்திரியாக மீண்டும் நிதிஷ்குமார் பதவியேற்றார். துணை முதல்-மந்திரியாக தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார்.

இந்நிலையில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மீது சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. 243 எம்.எல்.ஏக்களை கொண்ட பீகார் சட்டசபையில் நிதிஷ் குமாருக்கு 165 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பீகார் சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவை 122 எம்.எல்.ஏக்கள். இதனால் நிதிஷ்குமார் அரசு பெரும்பான்மையை எளிதாக நிரூபிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com