பீகாரில் அடுத்தடுத்து திருப்பம்... நிதிஷ் குமார் ராஜினாமா; புதிய முதல்-மந்திரியாக பா.ஜ.க.வின் சாம்ராட் சவுத்ரி தேர்வு

பீகாரின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் பிரதமர் மோடிக்கு நிதிஷ் குமார் நன்றி தெரிவித்து கொண்டார்.
பீகாரில் அடுத்தடுத்து திருப்பம்... நிதிஷ் குமார் ராஜினாமா; புதிய முதல்-மந்திரியாக பா.ஜ.க.வின் சாம்ராட் சவுத்ரி தேர்வு
Published on

பாட்னா

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக, முதல்-மந்திரி நிதிஷ் குமார் செயல்பட்டு வந்த நிலையில், அவர் மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியிட முடிவு செய்து, அதற்காக முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறேன் என கூறினார்.

இதற்கு கட்சிக்குள் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அவர் பதவி விலக கூடாது என தொண்டர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில், எம்.எல்.சி. பதவியை நிதிஷ் குமார் கடந்த மார்ச் 30-ந்தேதி ராஜினாமா செய்துள்ளார். அதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக நிதிஷ் குமார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், பீகாரில் புது வருட நாளான இன்று அடுத்தடுத்து திருப்பம் ஏற்பட்டு உள்ளது. பீகார் முதல்-மந்திரி பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்துள்ளார். இதனால், 21 ஆண்டுகளாக முதல்-மந்திரியாக பதவி வகித்த அவருடைய சகாப்தம் முடிவுக்கு வருகிறது.

பீகாரில் நீண்டகாலத்திற்கு முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர் நிதிஷ் குமார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் 10-வது முறையாக முதல்-மந்திரியாக அவர் பதவியேற்றார். நாட்டில் நீண்டகாலம் முதல்-மந்திரியாக பதவி வகித்தவர்களின் வரிசையில் 8-வது இடத்தில் அவர் இருக்கிறார்.

அவருடைய ராஜினாமாவை அடுத்து, அவரின் மகனுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பீகாரின் புதிய முதல்-மந்திரியாக பா.ஜ.க.வின் சாம்ராட் சவுத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

புதிய அரசுக்கு என்னுடைய ஒத்துழைப்பு, வழிகாட்டுதல் எப்போதும் இருக்கும் என கூறிய நிதிஷ் குமார், பீகாரின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் பிரதமர் மோடிக்கு நன்றியும் தெரிவித்து கொண்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com