கர்நாடகாவில் மந்திரி மீது லஞ்ச புகார் கூறிய பா.ஜ.க. காண்டிராக்டர் தற்கொலை

கர்நாடகாவில் மந்திரி ஈஸ்வரப்பா மீது லஞ்ச குற்றச்சாட்டு கூறிய பா.ஜ.க. காண்டிராக்டர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கர்நாடகாவில் மந்திரி மீது லஞ்ச புகார் கூறிய பா.ஜ.க. காண்டிராக்டர் தற்கொலை
Published on

பெலகாவி,

கர்நாடகாவில் பெலகாவி மாவட்டத்தில் இந்தலகா கிராமத்தில் வசித்து வந்தவர் சந்தோஷ் பாட்டீல். காண்டிராக்டரான இவர், ஆளும் பா.ஜ.க.வில் தொண்டராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், இவர் திடீரென நேற்று காணாமல் போனார்.

இதனை தொடர்ந்து, போலீசார் பாட்டீலின் போனை ஆய்வு செய்தனர். இந்நிலையில், உடுப்பி நகரில் கர்நாடக அரசு போக்குவரத்து கழக பேருந்து நிலையம் அருகே சாம்பவி லாட்ஜில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன், பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராமப்புற வளர்ச்சி துறை மந்திரியான கே.எஸ். ஈசுவரப்பா, பொதுப்பணி துறையில் ஒப்புதல் வழங்கிய பணிக்காக 40 சதவீத லஞ்ச பணம் கேட்டார் என அதிரடி குற்றச்சாட்டை கூறினார்.

இந்நிலையில் சந்தோஷ் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு குறிப்பு ஒன்றையும் எழுதி வைத்து உள்ளார். அது சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது.

அதில், தனது மரணத்திற்கு ஈசுவரப்பா காரணம் என குறிப்பிட்டு உள்ளார். தனது கனவை தூர வைத்து விட்டு வாழ்வை முடித்து கொள்ள முடிவு செய்துள்ளேன் என அவர் எழுதியுள்ளார்.

இறுதியாக அந்த குறிப்பில் பா.ஜ.க. தொண்டரான சந்தோஷ், முன்னாள் முதல்-மந்திரி பி.எஸ். எடியூரப்பா, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் பிரதமர் மோடி ஆகியோரிடம் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு உதவும்படி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

இதுபற்றி உடுப்பி போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com