கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பா.ஜனதா தயாராகி வருகிறது - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பா.ஜனதா தயாராகி வருகிறது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பா.ஜனதா தயாராகி வருகிறது - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
Published on

கர்நாடகம்,

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது தலைமையிலான மந்திரிசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2023) மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, அடுத்த மாதம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், சட்டசபை தேர்தல் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பா.ஜனதா தயாராகி வருகிறது. கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த இருப்பதாக வரும் தகவல்களில் உண்மை இல்லை. தற்போதுள்ள சூழ்நிலையில் சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தும் எண்ணம் அரசிடம் இல்லை. முன்கூட்டியே தேர்தல் நடத்துவது குறித்து பா.ஜனதா தலைமையும் எந்த விதமான ஆலோசனையும் நடத்தவில்லை. எனது தலைமையிலான அரசு முழுமையாக நிறைவு செய்யும்.

பா.ஜனதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், சாதனைகள், வளர்ச்சி பணிகள் குறித்து மக்களுக்கு தெரிவிக்கப்படும். இதன்மூலம் மக்களின் ஆதரவை பெற தேவையான நடவடிக்கை எடுத்து வருவதுடன், தேர்தலை சந்திக்கவும் தயாராகி வருகிறோம். காங்கிரசில் உட்கட்சி பூசல் அதிகமாக உள்ளது. தலைவர்கள் மோதிக் கொள்வதால் தொண்டர்கள் சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com