நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்கள் போராட்டம்

காங்கிரஸ் கட்சியை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்கள் போராட்டம்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான, ஒரே நாடு ஒரே தேர்தல் திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் பற்றிய 2 நாள் விவாதத்தின் முடிவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் பேசினார். அவர் பேசும்போது, அம்பேத்கரை பற்றி சர்ச்சையாக பேசினார் என கூறப்படுகிறது. இதனை கண்டித்து நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரசை கண்டித்து பாஜக எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அம்பேத்கரை அவமதித்ததாக கூறி பாஜக எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கையில் பதாகைகளை ஏந்தியடி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com