

பெங்களூர்
கர்நாடக மாநில பெலகாவியில் மகளிர் காங்கிரஸ் தலைவி லட்சுமி ஹெப்பால்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
அண்மையில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க முற்பட்ட பாஜகவினர் பலர் என்னை தொடர்பு கொண்டு, காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவுக்கு வந்தால் ரூ.30 கோடி, அமைச்சர் பதவி தருவதாக ஆசை வார்த்தை கூறியிருந்தனர். அப்போதுதான் ஹைதராபாத்தில் இருந்தேன். தொலைபேசி மூலமாக பாஜக தலைவர்களை பேசியதை பதிவுசெய்து, அதை காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடம் காட்டினேன்.
பாஜகவினர் என்னை அவர்கள் கட்சிக்கு இழுக்க மேற்கொண்ட முயற்சிகளைத்தான் கூற விரும்புகிறேன். காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுத்து கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக செய்த சதியை பகிரங்கப்படுத்த விரும்பினேன். பாஜகவினரின் ஆசை வார்த்தைகளுக்கு நான் இணங்காததோடு, எந்த சூழலிலும் காங்கிரஸ் கட்சியை விட்டுவிலக மாட்டேன் என்று அவர்களிடம் கூறியிருந்தேன் என்றார்.