ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா அலுவலகம் குண்டு வைத்து தகர்ப்பு - மாவோயிஸ்டுகள் அட்டூழியம்

ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா அலுவலகம் குண்டு வைத்து தகர்ப்பு - மாவோயிஸ்டுகள் அட்டூழியம்

ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா அலுவலகத்தை மாவோயிஸ்டுகள் குண்டு வைத்து தகர்த்தனர்.
Published on

ஜாம்ஷெட்பூர்,

ஜார்கண்ட் மாநிலம் குந்தி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் அர்ஜுன் முண்டாவின் தேர்தல் அலுவலகம், கார்சவான் நகரில் உள்ளது. அந்த அலுவலகத்துக்குள் நேற்று அதிகாலையில் ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகள் 4 பேர் புகுந்தனர். அலுவலகத்தில் தூங்கிக் கொண்டிருந்த 4 டிரைவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

பின்னர், வெடிகுண்டை பொருத்தி, அதை வெடிக்கச் செய்தனர். இதில், அலுவலகத்தின் பின்பக்க சுவர் சேதமடைந்தது. தகவல் அறிந்து போலீசார் வந்தபோது, 100 மீட்டர் ஒயர்கள், ஒரு டெட்டனேட்டர், மாவோயிஸ்டு துண்டு பிரசுரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com