பா.ஜனதா 303 தொகுதிகளில் வெற்றி: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்கும் பா.ஜனதா 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பா.ஜனதா 303 தொகுதிகளில் வெற்றி: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணி அமோக வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியை தக்க வைத்துள்ளது.

இந்நிலையில் பா.ஜனதா கட்சி 303 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 303 இடங்களை பெற்றுள்ளது. காங்கிரஸ் 52 இடங்களில் மட்டுமே வென்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மாநில கட்சியான தி.மு.க., 23 இடங்களில் வென்று தேசிய அளவில் 3-ம் இடத்தைபிடித்துள்ளது என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com