மராட்டியத்தில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புக்கு 644 பேர் பலி

மராட்டியத்தில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புக்கு இதுவரை 644 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மராட்டியத்தில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புக்கு 644 பேர் பலி
Published on

புனே,

இந்தியாவில் கொரோனா 2வது அலையில் தீவிர பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு, தொடர்ச்சியாக கருப்பு பூஞ்சை நோய் தொற்றும் ஏற்பட்டு வருகிறது. இதனால், மக்கள் அதற்கும் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

கொரோனா சிகிச்சைக்கு ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட கூடிய சாத்தியம் அதிகமுள்ளது என கூறப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு காணப்படுகிறது.

இதனை முன்னிட்டு ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழகம், ஒடிசா, குஜராத், பஞ்சாப், அரியானா, கர்நாடகா, பீகார் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இதனை தொற்று நோய் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட தொற்று நோயாக அறிவித்து உள்ளது.

மராட்டியத்தில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 7,395 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 644 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,212 பேர் சிகிச்சை முடிந்து இதுவரை குணமடைந்து சென்றுள்ளனர். 4,463 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவற்றில் நாக்பூர் (101), புனே (85), நாசிக் (57) மற்றும் அவுரங்காபாத் (51) ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதேபோன்று புனே (1,215), நாக்பூர் (1,184), அவுரங்காபாத் (700) மற்றும் நாசிக் (512) ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com