மும்பையில் ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்

மிரட்டல் விடுத்த நபர் யார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மும்பையில் ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்
Published on

மும்பை,

மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்க்கு போனில் பேசிய நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். ரிசர்வ் வங்கியை வெடிகுண்டு மூலம் தகர்க்கப் போவதாக மிரட்டினார்.

இதுகுறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, மிரட்டல் விடுத்த நபர் யார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com