மாடல் அழகி தற்கொலையில் காதலன் கைது

பெங்களூருவில் மாடல் அழகி தற்கொலையில் காதலன் கைது செய்யப்பட்டார்.
மாடல் அழகி தற்கொலையில் காதலன் கைது
Published on

சோழதேவனஹள்ளி:-

பெங்களூரு சோழதேவனஹள்ளி பகுதியில் வசித்தவர் வித்யாஸ்ரீ (வயது 25). தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இவர் மாடல் அழகி ஆவார். கடந்த 21-ந் தேதி வித்யாஸ்ரீ தனது வீட்டில் தற்கொலை செய்திருந்தார். இதுகுறித்து சோழதேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், வித்யாஸ்ரீ தற்கொலைக்கு அவரது காதலன் அக்ஷய் தான் காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வித்யாஸ்ரீயும், அக்ஷயும் காதலித்து வந்துள்ளனர். வித்யாஸ்ரீயிடம் இருந்து ரூ.1 லட்சம் வரை அக்ஷய் வாங்கி இருந்தார். அந்த பணத்தை திரும்ப கொடுக்காததுடன், அவருக்கு அக்ஷய் தொல்லையும் கொடுத்து வந்துள்ளார். இதனால் தற்கொலை முடிவை எடுத்திருப்பதாக தனது டைரியில் வித்யாஸ்ரீ எழுதி வைத்திருந்ததுடன், எனது சாவுக்கு அக்ஷய் காரணம் என்று கூறி இருந்தார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com