

கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் மால்டாவில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான புதிய 2000 ரூபாய் கள்ளநோட்டுக்களை எல்லைப் பாதுகாப்பு படை பறிமுதல் செய்து உள்ளது. இதுதொடர்பாக ஒருவரை கைது செய்து உள்ளது, அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் எல்லையில் இந்தியாவின் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களின் கள்ள நோட்டுக்கள் சிக்குவது வழக்கமாக உள்ளது. பாகிஸ்தானில் கள்ளநோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு வங்காளதேசம் வழியாக இந்தியா வருகிறது எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.