மாட்டு வண்டி ஏரிக்குள் பாய்ந்தது: குழந்தைகள் உள்பட 4 பேர் நீரில் மூழ்கி சாவு

மாட்டு வண்டி ஏரிக்குள் பாய்ந்த சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
மாட்டு வண்டி ஏரிக்குள் பாய்ந்தது: குழந்தைகள் உள்பட 4 பேர் நீரில் மூழ்கி சாவு
Published on

ஹாசன்,

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஒசஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜேகவுடா(வயது 55). நேற்று காலை தனது மனைவி சாரதம்மா (50), பேரக்குழந்தைகள் ருச்சிதா (8), துச்சிதா (5) ஆகியோருடன் மாட்டு வண்டியில் உருளைக்கிழங்குகளை ஏற்றிக்கொண்டு தோட்டத்திற்கு சென்றுகொண்டு இருந்தார்.

ஒரு குழியில் மாட்டு வண்டி இறங்கியபோது நிலைதடுமாறி அருகே இருந்த ஏரிக்குள் பாய்ந்தது. மாட்டு வண்டியில் சென்ற 4 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் 4 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். தகவல் கிடைத்து விரைந்துவந்த போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com