

கவுகாத்தி,
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
நாட்டு மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பலத்தை தருகிறது. நாட்டின் முதன்மை வேலைக்காரனாக பணியாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி. 2022-ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மிக கடினமான சூழலில் கூட பாஜக அரசுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். இதர பிற்படுத்தப்பட்ட இனத்தவர்களை உயர்த்துவதற்கான நடவடிக்கைக்கு மத்திய அரசு முயற்சித்தது. இதற்காக ஓ.பி.சி., கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.