5 சட்டசபை தொகுதிகளுக்கு ஜூன் 19-ம் தேதி இடைத்தேர்தல்


5 சட்டசபை தொகுதிகளுக்கு ஜூன் 19-ம் தேதி இடைத்தேர்தல்
x
தினத்தந்தி 25 May 2025 4:02 PM IST (Updated: 25 May 2025 4:03 PM IST)
t-max-icont-min-icon

ஜூன் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

புதுடெல்லி,

குஜராத் (2 தொகுதி) கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் (தலா 1) ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜூன் 19-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தகவலை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இந்த வாக்கு எண்ணிக்கை ஜூன் 23-ம் தேதி நடக்கிறது. எம்.எல்.ஏக்கள் மறைவு மற்றும் பதவி விலகல் ஆகியவற்றால் இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த அறிவிப்பின் மூலம் தொகுதிகளிலும் மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

1 More update

Next Story