5 சட்டசபை தொகுதிகளுக்கு ஜூன் 19-ம் தேதி இடைத்தேர்தல்

ஜூன் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
புதுடெல்லி,
குஜராத் (2 தொகுதி) கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் (தலா 1) ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜூன் 19-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தகவலை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இந்த வாக்கு எண்ணிக்கை ஜூன் 23-ம் தேதி நடக்கிறது. எம்.எல்.ஏக்கள் மறைவு மற்றும் பதவி விலகல் ஆகியவற்றால் இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த அறிவிப்பின் மூலம் தொகுதிகளிலும் மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





