தமிழகத்தில் 6 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தமிழகத்தில் 6 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
தமிழகத்தில் 6 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Published on

புதுடெல்லி

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகத்தில் 6 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

ஒவ்வொரு மருத்துவக்கல்லூரியும் ரூ.325 கோடியில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. மத்திய அரசு ரூ.195 கோடியும் தமிழக அரசு ரூ.130 கோடியும் வழங்குகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com