வங்கிகள் இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

விஜயா வங்கி, தேனா வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகிய மூன்று வங்கிகளை இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
வங்கிகள் இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Published on

புதுடெல்லி,

விஜயா வங்கி, தேனா வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகிய மூன்று வங்கிகளை இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாட்டின் வங்கித்துறையில், மூன்று வங்கிகளை இணைத்துள்ளது இதுதான் முதல் தடவையாகும்.

மூன்று வங்கிகள் இணைப்பு மூலம், நாட்டின் 3-வது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இது உருவெடுத்துள்ளது. இந்த வங்கிகள் இணைப்பு வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அண்மையில் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com